×

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் விசிக பிரமுகர் சடலம் மீட்பு

திருவொற்றியூர்:  எண்ணூர், எர்ணாவூர் 4வது தெருவை சேர்ந்தவர் விசிக பிரமுகர் தனசேகர் (48). இவரது மனைவி தீபா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தீபாவிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனசேகர் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். மனைவி தீபா, மகன் பிரவீனுடன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வருகிறார். தனசேகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர், குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்தது. நேற்று காலை, தனசேகருக்கு கடன் தந்ந 2 பேர், அவரின் வீட்டுக்கு வந்தனர். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தனசேகர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் விசிக பிரமுகர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Visika Pramukhar Thanasekar ,4th Street, Ernavur, Ennore ,Deepa ,
× RELATED துர்க்கையின் நவ வடிவங்கள்!